சென்னை
கடும் பனி மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
குறிப்பாக இன்று காலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.
விமான நிலய ஓடுபாதையே தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக இருந்தது.
இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணிக்கு பிறகே, விமான சேவைகள் சீராக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel