கொல்கத்தா

ரும் மேர்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அடுத்த 2026 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. .தேர்தலையொட்டி மேர்கு வங்க முதல்வரும் அம்மாநில ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கட்சி எம் எல் ஏக்கள் கூட்டட்தில் கலந்துக் கொனார்

கூட்டத்தில் மம்தா பானர்ஜி,

 ‘டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பா.ஜனதா வென்று விட்டது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன். நாம் மட்டுமே போதும்’

மாநிலத்தில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் 4-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். தேர்தலில் பா.ஜனதா எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும்,  அப்படி இல்லாவிட்டால் தேசிய அளவில் பா.ஜனதாவை கட்டுப்படுத்துவது இந்தியா கூட்டணிக்கு கடினமாக இருக்கும்

என்று உரையாற்றியுள்ளார்.