தேனி

ன்று தேனி மாவட்ட ஆட்சியர் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி 6 கடைகளுக்கு  அபராதம் விதித்துள்ளார்.

 

தொடர்ந்து பலமுறை  தேனி பஸ் நிலையத்தில் தொடர்ந்து உணவுப்பொருட்கள் காலாவதியானதை விற்பனை செய்வதாக மாவட்ட ஆட்சியர்க்கு தகவல்கள் வந்ததால் இன்று மாவட்ட ஆட்சியர் திடீரென தேனி பேருந்து நிலையத்தில் இருந்த கடைகளில் சோதனை நடத்தினார்.

ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள பேக்கரி கடை, டீ கடை, இறைச்சி கடை மற்றும் உணவு கடை ஆகிய இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் கெட்டுப்போன பல பொருட்களை பறிமுதல் செய்து அதற்கு அபராதம் விதித்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் கண்டுபிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 200 கிலோவுக்கும் மேலான காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 6 கடைகளுக்கு ரூ. 18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.