அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்பம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த AI வருகையால் AI தொழில்நுட்பத்திற்கு செலவிடப்படும் தொகை சொற்பமாக குறையும் என்றும் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதேபோல் வெகுவாக குறையும் என்றும் கூறப்பட்டது.

இதனால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வேகமாக சரிந்தது.

இதனைத் தொடர்ந்து DeepSeek AI தொழில்நுட்பத்தில் பகிரப்படும் தரவுகள் சீன அரசாங்கத்திற்கு கசிய வாய்ப்பு இருப்பதால் தங்கள் நிறுவனங்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்தன.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த AI தளங்களால் அரசு ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.