பிரயாக்ராஜ்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவை முன்னிட்டு இதுவரை 34.87 கோடிக்கும் அதிகமானோர் புதிய நிராடி உள்ளனர்

கடந்த 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதையொட்டிக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி, 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று வசந்த பஞ்சமியை முன்னிட்டு அதிகபட்சமாக 2.33 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இம்முறை மகா கும்பமேளாவுக்கு சுமார் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.