இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 12ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபருடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் திங்களன்று தெரிவித்தனர்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அவரை முதல்முறையாக சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மோடியின் வருகை குறித்து அமெரிக்கா இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. கடந்த வாரம், வெளியுறவு அமைச்சகம் (MEA), பிரதமர் மோடியின் அமெரிக்க “முன்கூட்டிய” வருகைக்காக வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறியது.