மேட்டூர்

மேட்டூரில் உள்ள அனல் மின்நிலைய நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிர்ழந்துள்ளனர்.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. இவற்றில் முதல் பிரிவில் 840 மெகாவாட், மற்றும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நேற்று மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மூவரை தீயணைப்புத் துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

விபத்து நடந்த பகுதியில் பணிபுரிந்து வந்த சிலர் மாயமாகி அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இருவரும் நிலக்கரி குவியலுக்குள் இருந்து சடலமாக மிட்கப்பட்டுள்ளனர். ஒருவர் நிலக்கரி குவியலில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இந்த விபத்தால் மேட்டூர் அனல் மின் நிலையம் தற்போது பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.

[youtube-feed feed=1]