குற்றாலம்

நேற்று முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது குறிப்பாக. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தனர். குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வெயில் அடித்து. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து சீராக விழுந்தது.

எனவே குற்றாலத்தில் உள்ள  அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இதையொட்டி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்துள்ளனர்.