மும்பை

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஐ பி எல் சீசனில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 7.5 லட்ச போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் கிரிக்கெட் வீரர், அவர் ஒப்பந்தம் செய்த தொகைக்கு கூடுதலாக 1.05 கோடி ரூபாய் பெறுவார். ஒவ்வொரு அணியும் சீசனுக்கான போட்டிக் கட்டணமாக 12.60 கோடி ரூபாயை ஒதுக்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் அணிகள் அதிக வருவாயை ஈட்டுவர்”

என்று தெரிவித்துள்ளார்.