நடிகர் ஜெயம் ரவி தனக்கு சொந்தமான பொருட்களை மனைவி ஆர்த்தியிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது மனைவி வெளியிட்ட அறிவிப்பில் திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வது குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பரவின.

இந்த நிலையில் மனைவி ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டு தருமாறும் அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் ஜெயம் ரவி இன்று புகார் அளித்துள்ளார்.

விவாகரத்து அறிவிப்பு : ஜெயம் ரவியின் முடிவு தன்னிச்சையானது… ஆர்த்தி அறிக்கை…