சென்னை

ன்று முதல் சென்டிரல் – ஆவடி இடையே சில மின்சார ரயில்க ரத்து செய்யப்படுகின்றன.

இன்று (25-ந்தேதி) முதல் 27-ந் தேதி வரையில் இரவு 12.30 மணி முதல் காலை 3.30 மணி வரை சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முழுநேரமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 27-ந்தேதி வரை இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி நேரம் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரயில் ஆவடி- மூர்மார்க்கெட் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் 27-ந்தேதி வரை காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்டிரால் வரும் மின்சார ரயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இதற்கு ஏற்றவாறு பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளலாம்.

என்று கூறப்பட்டுள்ளது.