கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஒரு மானவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் சிவராமன் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில் 8 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.  அனைத்து மகளிர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் என்.சி.சி. முகாம் நடத்திய சிவராமனை கைது செய்து முகாம் நடத்த உடந்தையாக இருந்ததாகவும், சிவராமன் செய்த பலாத்காரத்தை மறைக்க துணை போனதாகவும் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சிவராமனின் கூட்டாளிகள் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தற்போது சிவராமன் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது சிவராமன் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு நில பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரிடம் இருந்து 36 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

இவர் போலியாக நீதிமன்ற உத்தரவை தயார் செய்தும், நீதிமன்றத்தின் பெயரில் வங்கியில் கணக்கு இருப்பது போல் போலி ரசீது தயார் செய்தும் 36.20 லட்சம் மோசடியாக வசூலித்தது தெரியவந்துள்ளது. காவல்துறை எஸ் பி அலுவ்லக்த்தில் பாதிக்கப்பட்டோர் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர்.