சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சிகள் விசாரணையை தொடர உத்தரவு இட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு செய்தது.

இன்று செந்தில் பாலாஜி மனு மீதான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றபோது செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை துவங்கியதாக அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.