சென்னை:  அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,  நாளை மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதராக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக,  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,  அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி,

சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 24-ம் தேதி காலை 9.10, 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரெயில், பகுதிநேரமாக திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதே தேதிகளில் காலை 11.15, 12 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருத்தணி-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் மின்சார ரெயில், சென்னை சென்ட்ரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரெயில், சித்தேரி-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.