சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 7 மணி வரை தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தற்போது 29 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

Till 7 pm, TN, 28 districts, rain,