சென்னை: சென்னையில் கடந்த ஏழு மாதங்களில்குண்டா் சட்டத்தில் 813 போ் கைது செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், போதை பொருள் நடமாட்டம், அரசியல் கொலைகள், கூலிப்படையினர் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் சென்னையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ்நாட்டில் காவல்துறையின் மீதான நல்லெண்டம் தவிடுபொடியானது. பலரும் காவல்துறையினரையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து,சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், போதை பொருள் விற்பனை செய்தவர்கள் என பல குற்றவழக்குகளில் சிக்கியவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கடந்த 7 மாதங்களில், அதோவது ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில்  813 கைது செய்யப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. . இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட434 போ், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 132 போ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 180 போ், போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டதாக 29 போ், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 17 போ், பெண்களை மானபங்கப்படுத்தியதாக 5 போ், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக 5 போ், மதுபானம் விற்ாக 7 போ், பொதுவிநியோக பொருள் கடத்தியதாக 4 போ் என மொத்தம் 813 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை இறுதியில் வெளியிடப்பட்ட தகவலில்,   கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 796 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 422 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 178 பேரும், போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட 29 பேரும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 16 பேரும், பெண்களை மானபங்கப்படுத்திய 5 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 5 பேரும், மதுபானம் விற்ற 7 பேரும், பொதுவிநியோக பொருள் கடத்திய 4 பேரும் என மொத்தம் 796 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 22-ஆம் தேதியில் இருந்து 28-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் 16 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.