புதுச்சேரி

கஸ்ட் 7 முதல் புதுச்சேரியில் அர்சுப் ப்ள்ளிகளின் வேலை நேரம் மாற்றப்பட உள்ளது.

.தற்போது புதுச்சேஎரியில் அரசு பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்குகின்றன. இந்த தொடக்க நேரம் ஆகஸ்ட் 7 முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் புதிய அட்டவணைப்படி காலை 9.15 – 9.30 வரை வழிபாடு, 9.30 – மதியம் 12.25 வரை 3 பாடவேளைகள் நடக்கும். காலை 11- 11.10 வரை இடைவேளை, மதியம் 12.40- 1.30 வரை மதிய உணவு இடைவேளை விடப்படும்.

பிறகு மதியம் 1.30- மாலை 4.20 வரை 4 பாடவேளைகள் எனவும் மதியம் 2.50- மாலை 3 வரை இடைவேளை விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.