சென்னை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நிதி ஆயோக் கூட்டத்தில் பேச விடாமல் செய்தமைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சிகள் ஆளும் முதவர்ர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் ஒரே முதவராம மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார்.

அப்போது அவர் செய்தியாளர்களை மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று அவர் கூறிஅதாவும் அவரை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். ஆனால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வ்ர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ,

“இதுதான் கூட்டாட்சியா?

ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?

எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்”

எனத் தெரிவித்துள்ளார்.