திருநெல்வேலி

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாஞ்சோலை மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து வழக்கு தொடுக்க உள்ளது.

கடந்த 1929 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028 ல் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.

தமிழகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. எனவேபிபிடிசி நிறுவனமும் தொழிலாளர்கள் வீடுகளை தற்காலிகமாக காலி செய்ய வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.  திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த வழக்கு விரைவில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது.