டெல்லி

ரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த 11 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்துக்கு 12 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது எனக்கூறியதுடன் தமிழகத்துக்கு தினமும் ஒரு டி எம் சி தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தார்.

, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. வரும் 24 ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.