டெல்லி

ச்சநீதிமன்றம் சவுக்கு சங்கர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

பெண் காவல்துறையினரைப் பற்றி அவதூறு பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த கைது குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அவர் தனது ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும், தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இடைக்கால நிவாரணம் வழங்கினால் அவதூறு கருத்தை கூற மாட்டேன் என சவுக்கு சங்கர் உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை உயரீதிமன்றத்தில் இறுதி முடிவை அறிவிக்காமல் இருக்கும் நிலையில், நாங்கள் முடிவெடுப்பது சரியல்ல என்று தெரிவித்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான மற்ற வழக்குகளுக்கு இந்த ஜாமீன் பொருந்தாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற்த்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிம்ன்ற்த்துக்கு மாற்றக் கோரிய மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.