சென்னை: காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காவிரில் தண்ணீர் திறந்து விட மறுத்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் நடவடிக்கை  தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசியல் கட்சிகள் வலியுறுத்திய நிலையில்,  காவிரி நதி நீர் விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திமுக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (16-07-24) அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதில், காவிரி நீரைத் தர மறுக்கும் கா்நாடகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக சட்டப் பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவைப்படும் சூழலில், உச்ச நீதிமன்றத்தை நாடி காவிரியில் நீரைப் பெறுவதற்கான அனைத்து சட்டபூா்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுக்குப் பிறகும் தமிழகத்துக்கான பங்கீட்டு நீரை கா்நாடகம் இதுவரை வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டப் பேரவை கட்சிகளின் தலைவா்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவா்கள் அனைவரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

கூட்டத்தின்  இறுதியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  காவிரி நதி நீா் விவகாரத்தில், நடுவா் மன்றத்தின் இறுதி உத்தரவு, உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு ஆகியவற்றைப் பின்பற்ற கா்நாடகம் மறுத்து வருகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணைப்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு நீரைக்கூட கா்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு சட்டபூா்வமாக உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரைச் சென்ற ஆண்டில் கா்நாடக அரசு விடுவிக்காததால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடித்தான் நீரைப் பெற்றோம். அதுபோலவே தற்போதும் உச்சநீதி மன்றத்தைத்தான் நாட வேண்டிய நிலை ஏற்பட்டு  உள்ளது என்றார்.

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக் கூடிய சூழ்நிலையிலும், கா்நாடக அரசு நடந்துகொள்ளும் விதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

பேரவை கட்சிகளின் தலைவா்கள் கூட்டத்தில் அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், திமுக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன், அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், காங்கிரஸ் சாா்பில் கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பேரவை குழுத் தலைவா் செ.ராஜேஷ்குமாா், பாஜக சாா்பில் மாநில துணைத் தலைவா் கரு நாகராஜன், பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாா்க்சிஸ்ட் சாா்பில் பேரவை குழுத் தலைவா் வி.பி.நாகைமாலி, மத்திய குழு உறுப்பினா் பி.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலா் மு.வீரபாண்டியன், கட்சியின் பேரவை குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன், பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம், விசிக தலைவா் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏ-வுமான எம்.எச்.ஜவாஹிருல்லா, பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் எம்எல்ஏ.,வுமான ஈ.ஆா்.ஈஸ்வரன், புரட்சி பாரதம் கட்சியின் எம்எல்ஏ, பூவை எம்.ஜெகன்மூா்த்தி ஆகியோருடன் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் உள்ளிட்டோரும் அதிகாரிகளும் பங்கேற்றனா்.

ஓ.எஸ்.மணியன், எஸ்.பி. வேலுமணி (அதிமுக): மத்திய அரசு இடுபொருள் மானியத்தை ரூ.17 ஆயிரமாக உயர்த்திய போதும், தமிழக அரசு ரூ.13,500 மட்டுமே வழங்கியது. திமுக ஆட்சியில் குறுவைக்கு பயிர்காப்பீட்டை ரத்து செய்துவிட்டனர். கூட்டுறவு கடன் விவகாரத்தில், வறட்சி ஆண்டைாக இந்த ஆண்டை அறிவித்துஎப்போது வேண்டுமானாலும், அசல் மட்டும் கட்டினால் போதும் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். எந்த ஆட்சியாக இருந்தாலும் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் வஞ்சிக்கின்றனர். திமுக போதிய நீரை பெற்றுத்தர அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியாகவும் அழுத்தம் தரவேண்டும். தமிழக முதல்வர் கொண்டுவந்த கண்டன தீர்மானத்தை மட்டும்அதிமுக ஆதரிக்கிறது.

கரு.நாகராஜன் (பாஜக): காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமையை பெற தமிழக அரசுடன் பாஜக ஒன்றுபட்டு நிற்கும். இதில் பிரதமர் தலையிட வாய்ப்பே இல்லை. மாநில உரிமையை பெற அரசியல் பேசக்கூடாது. மக்கள் உரிமையை பெற ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): முதல்வரின் தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிரதமர் இதில் தலையிட்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத்தர வேணடும். இந்த விவகாரத்தில் அனைவரிடமும் ஒற்றுமை இருக்கிறது என்று நம்புகிறோம்.

மு.வீரபாண்டியன் (இ.கம்யூ): காவிரி விவகாரம் தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு ஏற்படவில்லை. ஒரு நதி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் செல்லும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது அவசியம். நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): கர்நாடகாவின் பாசனப்பரப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிகரித்துள்ளது குறித்தும் தண்ணீர் பெறவும் உச்ச நீதிமனறத்தை நாட வேண்டும். தமிழக அரசு வலிமையான அதிகாரம் வாய்ந்த ஆணையத்தை உருவாக்கவும் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.

திருமாவளவன் (விசிக): அனைத்து கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும், அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து கர்நாடக அரசுக்கு வழிகாட்டுதலை வழங்குமாறு அழுத்தத்தை கொடுக்கவேண்டும் போன்ற ஆலோசனைகளை முன்வைத்தோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

சதன் திருமலைக்குமார் (மதிமுக): உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழு தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக முதல்வரை கண்டிக்கிறோம். முதல்வரின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிப்போம்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): தமிழக முதல்வர்நிறைவேற்றியுள்ள 3 தீர்மானங்களால் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும், காவிரி ஆணையத்தையும் மதிப்பதில்லை. கர்நாடகாவில் விவசாய பரப்பை அதிகரிக்கின்றனர். தமிழகத்திலும் நீரேற்று விவசாய பரப்பை அதிகரிக்க வேண்டும். தமிழக அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில், காவிரி நீரை தமிழகத்துக்கு தரமுடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரியில் நமக்கான நீரைப் பெறும் வகையில் மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காவிரி நடுவா் மன்றம் அளித்த இறுதித் தீா்ப்பு, உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ஆகியவற்றை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதுடன், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு இப்போது உத்தரவிட்டுள்ளவாறு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது என்று கா்நாடக அரசு மறுத்துள்ளது. இதற்கு சட்டப் பேரவை தலைவா்கள் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரை உடனடியாக விடுவிக்க கா்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தை சட்டப்பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு பெற வேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்பட்டால் உச் நீதிமன்றத்தை நாடி அனைத்து சட்டபூா்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்தக் கூட்டம் ஒருமனதாக தீா்மானிக்கிறது.

இந்தத் தீா்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சுடன் மேற்கொண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை அரசு நிலைநாட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.