சென்னை: பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும், ஒன்பது இணை இயக்குனர்களுக்கு இடமாறுதல் வழங்கி, துறையின் செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.  இந்த திடீர் மாற்றம் பள்ளிக்கல்வித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தி  உள்ளது.

இதுதொடர்பாக  பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்த உத்தரவில், ”தொடக்கக் கல்வித் துறையில் இணை இயக்குனர் பதவியில் இருந்த சுகன்யா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், நிர்வாக இணை இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைநிலைக் கல்வி இணை இயக்குனராகப் பணியாற்றி வந்த கோபி தாஸ், தொடக்கக் கல்வி நிர்வாக இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஞான கவுரி, பள்ளிக் கல்வித் துறையில் உயர்கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஞானகவுரி, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் பிரிவில் பணியாற்றும் ஸ்ரீதேவி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தில் உள்ள சாந்தி, தொடக்க கல்வி இயக்குனரகத்தின், உதவி பெறும் பள்ளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனரக தொழிற்கல்விப் பிரிவில் உள்ள ராமகிருஷ்ணன், தனியார் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கள்ளர் சீரமைப்புப் பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், பள்ளிக்கல்வி இயக்குனரக தொழிற்கல்விப் பிரிவுக்கும்,

ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முனுசாமி கள்ளர் சீரமைப்பு பிரிவுக்கும்,

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக உள்ள ஆனந்தி, ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக் ஷாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.