சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதியாகி உள்ள  நிலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ளவர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 10 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில்,  தொடர்ந்து திமுக முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடியுள்ள தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகம் காணும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மதியம் 12.30 மணி நிலவரப்படிதிமுக வேட்பாளர் அன்னியூர் சிவா  தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சுமார் 40ஆயிரம் வாக்குகள்  அதிகம்  பெற்று பாமக வேட்பாளரை  திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிவாண்டி தொகுதியில் ஜூலை 10ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்துவாக்கு எண்ணிக்கையானது  இன்று (ஜுலை 13ந்தேதி) நடை பெற்று வருகிறது.

முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.   அதைத்தொடர்ந்து இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.   வாக்கு எண்ணிக்கை யானது, மொத்தம் 20 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது. இதுவரை  8 சுற்றுக்கள் எண்ணப்பட்டு உள்ளது.

முன்னதாகவாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றிருந்தார்., 

தொடர்ந்து இதுவரை 10 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பாமக வேட்பாளர்  30ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ள நிலையில் நாதக வேட்பாளர் வெறும் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 70ஆயிரத்தை கடந்து முன்னிலையில் உள்ளார். இதனால் அவரது வெற்றி உறுதியாக உள்ளது.

விக்கிவாண்டி தொகுதியில், , திமுக சார்பில்  அன்னியூர் .சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்இங்கு  82.48 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.