சென்னை: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களின் சம்பளத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக கூறி, தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப் பட்ட நிலையில், மாநகராட்சி மேயர் நேரில் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்த நடத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சி  மேயராக திமுகவைச் சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன் சகோதரர் ஜெகன் பெரியசாமி இருந்து வருகிறார். இவர் தலைமையிலான மாநகராட்சியில் முறைகேடு நடைபெறுவதாக  தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அங்கு மாநகராட்சி பகுதி யில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 4 மண்டலங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை பணி  தொழிலாளர்களாக சுமார் 400பேர் வரை  பணி செய்து வருகின்றனர்.  இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக ஊதிய உயர்வு உள்பட அவர்களின் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  . தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில்  மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி டிரைவர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்,   தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். பி.எப், இ.சி.ஐ. தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும். ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட19 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கெண்டுகொள்ளாத  நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கடந்த ஜூன் மாதம்   26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களின் கோரிக்கைகள்  தரப்படும்  மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், அவர்களுக்கு இந்த மாதம் 5ந்தேதி வழங்கப்பட்ட ஜுன் மாத சம்பளத்தில் தலா ரூ.50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது தூய்மை பணியாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் முறையே பதிலை கூறாததால், மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை  கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். அதன்படி, இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன்,  திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதனால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்

பின்னர் இதுகுறித்து, மாநகராட்சி மேயருக்கு தகவ்ல கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர் களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இ .எஸ்.ஐ. , பி.எப். பிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது வழங்கப்படும்.  பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தொழிலாளர்கள் அதனை ஏற்று கலைந்து சென்றனர் என்றார்.