டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கலவரம் வெடித்தது. தற்போதும் அதாவது ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே நீடித்து வருகிறது. இதுவரை இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது சற்றே வன்முறை சம்பவங்கள் தற்போது குறைந்துள்ளதால் மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆயினும் ஆங்காக்கே அவ்வப்போது கலவரம் நிகழ்ந்து வருகிறது .  வன்முறை அச்சுறுத்தலால் ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பாட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார். ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் சென்று அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார். வன்முறையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.