காங்கிரஸ் கட்சிக்கு பந்தயத்தில் ஓடும் குதிரைகள் தான் தேவை, கல்யாண ஊர்வலத்தில் அசைந்து ஆடிச் செல்லும் குதிரைகள் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தொடர்களிடையே பேசிய ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.

கடந்த தேர்தலில் 3 மாதங்களுக்கு முன்பு தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் செயல்பட தொடங்கினர் அப்படி இருந்தும் குஜராத்தில் குறிப்பிடும்படியான வெற்றியை பெற்றுள்ளது.

அடுத்த தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக செயல்பட துவங்கியுள்ளதை அடுத்து 30 ஆண்டுகள் கழித்து குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட கூறினார்.

மேலும், குஜராத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை தகர்த்தது போல் பாஜக அரசை தகர்த்தெறிவோம் என்றும் தெரிவித்தார்.

ராமர் பெயரால் மத அரசியல் நடத்திய பாஜக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அயோத்தியில் ராமர் அமைத்த போதும் அயோத்தியிலேயே அக்கட்சி படுதோல்வி அடைந்தது அதுபோல் இம்முறை குஜராத்தில் பாஜக படுதோல்வி அடையும் என்று பேசினார்.