டெல்லி: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள,  ராகுல்காந்தி,  குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் அரசு நிறுத்தும் என நம்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறிறித்து காங்கிரஸ் எம்.பி.யும்,  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி  வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான திரு ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மற்றும் அருவருப்பான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர், மேலும் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன் ன கூறியுள்ளார்.