டெல்லி

டெல்லி முதல்வர் அரவிண்ட் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு கடந்த மார்ச் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. எனவே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது.

கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டு அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது., நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு மே 11ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. பிறகு ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.

தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ரத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார் மனுவை விசாரித்த நீதிபதி நியாய் பிந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேற்று திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினார். இதையடுத்து கெஜ்ரிவால் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமறம், அமலாக்கத்துறை தரப்பு மனுவை விசாரித்து முடிக்கும்வரை கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவன்யூ நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து திகார் சிறையிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.