துரை

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால் விரைவில் மதுரை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளது.

நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதி இரு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் இயக்கப்படுவதால் பயண நேரம் வெகுவாக குறைகிறது. மக்கள் மத்தியில் வந்தே பாரத் ரெயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இந்த சேவையை மத்திய அரசு விரிவாக்கம் செய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு, சென்னை-நெல்லை, கோவை-பெங்களூரு, சென்னை-கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  பலரும் மதுரை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

எனவே இந்த 2 நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து விரைவில் இந்த ரெயில் சேவை தொடங்க உள்ளது. நேற்ரு இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது  காலை 5.15 மணிக்கு. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 5 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு காலை 6 மணி அளவில் சென்றது.

பிறகு திருச்சிக்கு 7.15 மணிக்கும், சேலத்துக்கு 9.55 மணிக்கும், மதியம் 1.15 மணி அளவில் பெங்களூருவுக்கும் சென்றடைந்தது. மறுமார்க்கத்தில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் இரவு மதுரை வந்தடைந்தது.

ரயில்வே அதிகாரிகள் இது குறித்து,

”வரும் 20 ஆம் தேதி முதல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை வருகிற 20-ந்தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. ஒரிரு நாட்களில் புதிய ரயிலுக்கான அதிகாரப்பூர்வ வழித்தடம், கட்டண விவரம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும்.”

என்று தெரிவித்துள்ளனர்.