கொல்கத்தா

கொல்கத்தா நகரில் உள்ள அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அக்ரோபோலிஸ் வணிக வளாகம் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகம்m மொத்தம் 21 மாடிகளைக் கொண்டதாகும் இந்த வளாகத்தின் 3-வது மாடியில் இன்று மதியம் 12.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அங்குள்ள புத்தக கடையில் முதலில் பற்றி எரிந்த தீ, பின்னர் வேகமாக மற்ற இடங்களுக்கு பரவத் தொடங்கியது. தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் நகரில் கடும் பரப்ரப்பு ஏற்பட்டது.

வணிக வளாகத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு பணிகள் சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.

தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து, உள்ளே சூழ்ந்திருந்த கரும்புகையை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்., தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.