டெல்லி

டெல்லி உச்சநீதிமன்றம்.கெஜ்ர்வால் ஜாமீன் வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்துள்ளது.

அமல்லாகக்த்துறையால் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். வழக்கை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது

இந்த வழக்கு கடந்த 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர். அமலாக்கத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடைக்கால ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என கூறியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.இதற்கு எதிராக  கெஜ்ரிவால் தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. உச்சநீதிமன்ற இந்த வழக்கை 9ஆம் தேதிக்கு (நாளை மறுநாள்0 ஒத்திவைத்துள்ளது.

[youtube-feed feed=1]