கொடைக்கானல்

கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து 4 ஆம் நாளாகக் காட்டுத்தீ எரிந்து வருகிறது. 

கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தால் வனப்பகுதிகளில் அவ்வப்போது தீப்பற்றுவதும், அணைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.  அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராம வனப்பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாகக் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

இந்த காட்டுட்தீ கடந்த 4 நாட்களாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் பகுதிகளில் பரவி கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.  இந்தத் தீயினால் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

தீயை அணைக்க தேனி, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீயை அணைக்க தீவிரமாகப் போராடி வருகின்றனர்.