டெல்லி

நாளை மறுநாள் நடைபெற உள்ள 2 ஆம் கட்ட தேர்தலுக்கான  பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை மறுநால் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தைத் தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

இன்றுடம் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைகிறது… இத்னால் தேர்தல் களம் சூடு பிடித்து அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமராவதி, சோலாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பரப்புரை மேற்கொள்கிறார்.  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதுடன் அமராவதியில் பேரணி நடத்துகிறார்.