டெல்லி

மது உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த் ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, இடைவிடாமல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற இருந்தபோது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்குபெறாமலே டெல்லி திரும்பினார்.

அந்தக் கூட்டத்தில் அவருக்குப் பதிலாக மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கிப் பேசினார். ராகுல்காந்தி தற்போது உடல்நலம் தேறி இருப்பதால், புதன்கிழமை (இன்று) முதல் மீண்டும் பிரசார கூட்டங்களில் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

“ராகுல்காந்தி உடல்நலம் தேறி வருவதால், அவர் புதன்கிழமை முதல் மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் அமராவதியில் பகல் 12.30 மணிக்கும், சோலாபூரில் பிற்பகல் 3.30 மணிக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்”

என்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்