சென்னை

குருவாயூர் எக்ஸ்பிரஸ் போக்குவரத்து தண்டவாளப் பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினசரி தென்னக ரயில்வேக்கு உட்பட்ட சென்னையில் இருந்து மதுரை வழியாகக் கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

தற்போது  திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16127) வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 29 மற்றும் 30-ந் தேதிகளில் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.