ண்ருட்டி

ண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 பேருந்துகள் எரிந்து  சேதமாகி உள்ளன.

பண்ருட்டியில் ஒரு அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது. இங்கு 15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணி பகல் நேரங்களில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பேருந்தில் திடீரென தீப்பற்றியது..

இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.