டில்லி

ச்சநீதிமன்றம் நாடெங்கும் ஒரே மதத்தை அமல்படுத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத்தில் நாடு முழுவதும் ஒரே மதத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை முகேஷ் குமார், முகேஷ் மன்வீர் சிங் என்ற இருவர் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதாதன்சு துலியா ஆகியோர் நேற்று இந்த மனுவை விசாரித்தனர்.

விசாரணைக்கு மனுதாரர்களில் ஒருவர் ஆஜராகியிருந்தார். நீதிபதிகள் அவரிடம், ‘நீங்கள், நாடு முழுவதும் ஒரு அரசியல் சாசன மதம்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் மற்ற மதங்களைப் பின்பற்றுவோரை அவ்வாறு பின்பற்றாமல் உங்களால் தடுக்க முடியுமா? என்னது இது? எதற்காக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளீர்கள்?’ என்று கேட்டனர்.

மனுதாரர் அதற்கு,, தான் ஒரு சமூக ஆர்வலர்., அரசியல் சாசனத்தின் 32-வது பிரிவின்படி” இந்திய மக்கள் சார்பில் ஒரே அரசியல் சாசன மதம் கோரி இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளோம்” எனப் பதில் அளித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அந்த மனு, 1950-ம் ஆண்டு அரசியல் சாசன உத்தரவை ரத்து செய்யக் கோருவதாக கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

[youtube-feed feed=1]