டில்லி

டில்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டை முன்னிட்டு நடமாடும் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி-20 மாநாடு டில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது. டில்லியில் இதனை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக நடமாடும் காவல் நிலைய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த காவல் நிலையத்துக்காக ஒரு வேன், காவல் நிலைய வடிவமைப்பில் மாற்றப்பட்டு இதில் 5 பேர் உட்காருவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது.  இது ஒரு ஆய்வாளர் தலைமையில் துணை-ஆய்வாளர், ஏட்டு மற்றும் காவலருடன் சாதாரண காவல் நிலையம் போலச் செயல்படும்.

இங்கு இன்டர்நெட் வசதி மற்றும் மாநாட்டின் முக்கிய செய்திகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் விதமான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இது 24 மணிநேரமும் செயல்பட்டும் எங்காவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு உடனடியாக சென்றடையும். மாநாடு முடிந்த பிறகும் இந்த நடமாடும் காவ; நிலையம், செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.