புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எரிவாயு விலையில் ரூ.500 குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

நேற்று வீட்டு உபயோக ஏரோவாயு சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என விலையைக் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலைச் சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இன்று புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில்,

”சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து புதுச்சேரி அரசு கூடுதலாக 300 ரூபாய் மானியம் வழங்குகிறது. மொத்தம் சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்படுகிறது.

 மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானியத்தைச் சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக 150 ரூபாய் மானியம் வழங்குகிறது. மொத்தம் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.350 குறைக்கப்படுகிறது”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி முதல்வர்,

“புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு ரூ.200 மானியம் அளித்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. மத்திய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன். பிரதமருக்குப் புதுச்சேரி ஒன்றிய பிரதேச குடிமக்கள் சார்பாக எனது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.”

என்றும் தெரிவித்துள்ளார்.