ன்னை

சென்னை உயர்நீதிமன்றம் பாமகவின் 35ஆம் ஆண்டு விழா கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துவங்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த பாமக சார்பில் அனுமதி  கோரப்பட்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது கடலூரில் அண்மையில் என்.எல்.சிக்கு எதிராக பாமக போராட்டம் நடத்திய இடத்திலேயே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டதால், அங்குச் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது

பாமகவின் 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கினார்.

மேலும்,

”பொதுக்கூட்டம் மாலை 6 மணிக்குத் துவங்கி இரவு 8 மணி வரை நடத்திக் கொள்ளவ் வேண்டும் நீதிமன்றம்  பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையைத் தடுக்க முடியாது;  இருப்பினும் காவல்துறை தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கட்சியினரைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு கட்சியினரை வழி நடத்துவதற்குக் கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும்”

என்று நீதிபதி தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

ஆனால் கடலூரில்தான் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம், வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை; இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என பாமக வழக்கறிஞர் பாலு தகவல் தெரிவித்துள்ளார்.