சென்னை

ன்று முதல்வர் மு க ஸ்டாலின், 4 நாட்கள் பயணமாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்குச் செல்கிறார்.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின். சமீபத்தில் ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்குச் சென்று. அங்கு நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தற்போது 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி இன்று  காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

பிறகு அங்கிருந்து கும்பகோணத்திற்குச் சாலை மார்க்கமாகச் சென்று அங்கு மாலையில் நடக்கும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரிக்கான புதிய கட்டிடத் திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். பிறகு அவர் நாகப்பட்டினத்திற்குச் சென்று இரவு அங்கு தங்குகிறார்.

முதல்வர் நாளை காலை திருக்குவளைக்குச் சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடங்கி வைக்கிறார்.

அதே தினத்தன்று மாலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தஞ்சை,  திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள், விவசாயச் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

அன்று மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். பிறகு இரவில் வேளாங்கண்ணிக்குச் சென்று ஓய்வு எடுக்கிறார்.

மறுநாள் 26-ந்தேதி காலையில் கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட. பின்னர் நாகையில் இருந்து திருவாரூருக்குச் சென்று இரவில் அங்கு தங்குகிறார்.

பிறகு 27-ந்தேதி திருத்துறைப்பூண்டி சென்று அங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.. பிறகு திருச்சிக்குச் சென்று அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் பிற்பகல் சென்னை திரும்புகிறார்.