ஸ்லாம்பாத்

ந்தியாவில் சிறையில் உள்ள பயங்கரவாதி யாசின் மாலிக் மனைவி முஷல் ஹுசைன் மாலிக் பாகிஸ்தானில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக் காஷ்மீர் பிரிவினைவாதி ஆவார்,  இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய  புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான பல வன்முறைத் தாக்குதல்களில் யாசின் மாலிக் ஈடுபட்டு உள்ளார்.

இவர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.கடந்த  2019 இல் கைது செய்யப்பட்டு பின்னர் மே 2022 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் காபந்து அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட தற்காலிகப் பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரின் அமைச்சரவையில் யாசின் மாலிக்கின் மனைவி முஷல் ஹுசைன் முல்லிக் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்ற வியாழன் அன்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது 16 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.  அமைச்சரவையில் பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சராக யாசினின் மனைவி முஷல் ஹுசைன் முல்லிக் நியமிக்கப்பட்டு உள்ளார்.

லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சில் பட்டம் பெற்ற முஷல் ஹுசைன் மல்லிக்கை 2009 இல் யாசின் மல்லிக் திருமணம் செய்து கொண்டார்  திருமண விழாவில் . பாகிஸ்தானின் சில அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இவர்கருக்கு 10 வயது மகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் முஷலின் தாயார் ரெஹானா ஹுசைன் முல்லிக் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் மகளிர் பிரிவில் உறுப்பினராகவும் அதன் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.  இதைப் போல் முஷலின் தந்தை எம் ஏ ஹுசைன் புகழ்பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் ஆவார்.