சென்னை

மலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.

இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார், அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரமாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தன்ர்.

வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையைத் தொடங்கினர்

சோதனையின் முடிவில், இந்த பங்களா வீடு கட்டுவது தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அசோக் குமார் மனைவி நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.