திருவனந்தபுரம்

பொதுச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் கேரள சட்டசபையின் 9-வது கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்று மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முயல்வதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

அப்போது அவர்,

”நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு பொது சிவில் சட்டம் கேடு விளைவிக்கும்.   இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தின் முக உரையிலேயே மதச்சார்பின்மைக்கு உறுதி அளிக்கும் நாடாகும்.இங்கு எந்த மத விசுவாசியாக இருந்தாலும், அதன்படி சுதந்திரமாக வாழ ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உள்ளது.

இதை  அரசியல் அமைப்பு சட்டம் உறுதிப்படுத்துகிறது. கேரள சட்டசபையில் மத்திய அரசு அவசர கோலத்தில் எடுத்த பொது சிவில் சட்ட தீர்மானத்தில் இருந்து மத்திய அரசு பின்வாங்க வேண்டும் என்று கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த முதல் மாநிலம் கேரளாதான். மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை திணிக்கும் முயற்சியால் கேரள சட்டசபை கவலை மற்றும் அச்சம் கொண்டுள்ளது.  இந்த சபை மத்திய அரசு எடுத்துள்ள இந்த அவசர முடிவு அரசியல் அமைப்பு சட்டத்தின் மதச்சார்பின்மை நோக்கத்தை இல்லாமல்  செய்வதாகக் கருதுகிறது.

என்று கூறினார்.

பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையொட்டி இந்த சட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் ஏ.என்.சம்சீர் சட்டசபையில் அறிவித்தார்.