டில்லி

ன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் உறுதுணையாக இருந்த இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர். பதவி பறிக்கப்பட்டது.  குஜராத் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

“நான் நாடாளுமன்ற உறுப்பினர். பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த இந்திய மக்களுக்கு நன்றி. நான் எனது கடமை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறேன். நிச்சயம் உண்மை வெல்லும்; நான் எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன்” 

என்று கூறி உள்ளார்.