பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் ரூ.170 பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து கர்நாடக அரசு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. இதில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் அட்டைதாரர்கள்) மாதந்தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே 5 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. எனவே மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாகப் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கெடுபிடியால் கூடுதலாக அரிசி கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதால் 5 கிலோ இலவச அரிசிக்குப் பதில் பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கர்நாடக சட்ட அமைச்சர் எச் கே பாட்டில்  ”இலவச அரிசிக்குப் பதிலாக ஒரு கிலோவுக்கு 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் இந்த தொகை வழங்கப்படும்.  இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இதுவே அரிசி கொள்முதல் செய்யும் வரை மாற்று வழி ஆகும்”  என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]