சென்னை

சென்னை செண்டிரல் மற்றும் கடற்கரைக்கு வரும் கும்மிடிப்பூண்டி புறந்கர் ரயில்கள் தாமதத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

சென்ன போக்குவரத்தில் புறநகர் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.  குறிப்பாக சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் எப்போதுமே இந்த ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் இன்று கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை வரும் மார்க்கத்தில் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.  இதனால் இந்த ரயில் நிறுத்தப்பட்டு இந்த மார்க்கத்தில் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமக செல்கின்றன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள், ”கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்படும்.   அதுவரை ரயில்கள் தாமதமாகச் செல்லும்” என விளக்கம் அளித்துள்ளனர்.