டில்லி

ட்டப்படி தனி நபர்களும் குழந்தையை தத்தெடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது

உச்சநீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று 9-வது நாளாக விசாரணை நடைபெற்ற போது, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐய்ஷ்வர்யா,

“ஆண்-பெண் (வெவ்வேறு பாலின) தம்பதிக்கு இயற்கையாகப் பிறந்த குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் வகையில் நமது சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வெவ்வேறு பாலின தம்பதியையும் தன்பாலின தம்பதியையும் சமமாகக் கருத முடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளது. குழந்தைகளின் நலனே முதன்மையானது என நமது சட்டத்தின் பல்வேறு நிலைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தையைத் தத்தெடுப்பது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என பல்வேறு தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது”

என வாதிட்டார்..

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,

”நமது சட்டம் தனி நபர்கூட குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி அளிக்கிறது.  எனவே ஆணோ அல்லது பெண்ணோ தன்பாலின ஈர்ப்பாளராக இருந்தால்கூட குழந்தையைத் தத்தெடுக்கலாம். அத்துடன் குழந்தை பெற்றுக் கொள்ளத் தகுதி உடையவர்கூட குழந்தையைத் தத்தெடுக்கலாம். குழந்தை பெறத் தகுதி உள்ளவர்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல”

எனக் கூறி உள்ளார்.