பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.
சம்பந்தப்பட்டவர்களை பணி இடைநீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என உறுதியாக தெரிவித்த அவர்கள் நேற்று மாலை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.

மேலும், இன்று காலை 7 மணிக்கு மீண்டும் போராட்டம் தொடரும் என மாணவிகள் தரப்பு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 6 வரை கல்லூரி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாணவிகள் யாரும் இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்காததால் காவல் துறையினர் விசாரணை நடத்தவில்லை என்று சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel